-
உண்மையின் தரிசனம் பாகம்-13
ஆயுதங்களை ஒப்படைப்பதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்காத பட்சத்தில் புலிகளிடம் இருந்து பலவந்தமாக ஆயுதங்களை களையவும் இந்தியப்படைகள் தயாராக இருந்தன.
அதனால் தமது உயிரிலும் மேலாக புலிகளால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு புலிகள் முன்வந்திருந்தார்கள்.
1987ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி பாலாலி விமானப்படைத்தளத்தில் விடுதலைப் புலிகளின் முதலாவது ஆயுத ஒப்படைப்பு நடைபெற்றது.
விடுதலைப் புலிகளின் சார்ப்பில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் யோகரத்தினம் யோகி ஆயுத கையளிப்பின் அடையாளமாக ஒரு கைத்துப்பாக்கியை ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமது ~பிக்கப்| வாகனங்களில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கி அணிவகுத்து வந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக ஒப்படைத்தார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


0 comments: